தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி குறித்து முழு தகவலையும் பாப்போம்.
நடிகர்திலகம் சிவாஜி கனேக்ஷன் அவர்களின் புதல்வனான பிரபு 1980-களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பால் மக்களை கவர்ந்தார். அந்த காலத்தில் மாஸ் ஹீரோவான கமல், ரஜினி ஆகியோரிடமும் சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் குணச்சித்திர நடிகராக வளம் வர ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழியில் நடித்து வந்துள்ளார்.
ஆனால் திடீரென நேற்று முந்தைய நாள் [பிப்ரவரி 20] சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை சோதனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, நடிகர் பிரபு அவர்களை சோதனை செய்து பார்த்த பொது அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு கல் அடைப்பு இருந்ததால் நேற்று [பிப்ரவரி 21] அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். சிகிச்சைக்கு பின்னர் நடைபெறும் சோதனைக்கு பின்னர் இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…