பவித்ரா ரிஷ்தா என்ற இந்தி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான கனிஷ்கா சோனி, சமீபத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது இந்த முடிவுக்காக தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பின்வருமாறு :- என்னுடைய சுய திருமண முடிவு குறித்து நீங்கள் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியும், நான் இந்திய கலாச்சாரத்தை உண்மையாக நம்புகிறேன்.
இங்கே எனக்கென்று தனியாக ஒரு பார்வை உள்ளது. அதனால்தான் நான் தனிமையில் வாழும் முடிவை தேர்ந்தெடுத்தேன். திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல, ஒருவர் தேடும் அன்பு மற்றும் நேர்மை பற்றியது, அந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன், எனவே வெளி உலகில் தேடுவதை விட தனியாக வாழ்வதும் என்னை நேசிப்பதும் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
ஆனால் கூகிள் டிரெண்டிங்கிலும் செய்திகளிலும் என்னை வைரலாக்கியதற்கு மிக்க நன்றி. இருந்தாலும், அது என் நோக்கம் இல்லை. இது எனது முழு மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு, நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் மற்றும் எனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நடிகை கனிஷ்கா சோனி ஒரு பதிவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். அப்போதிலிருந்து அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…