தமிழ் சினிமாவில் உயரம் அதிகமான நடிகர்களில் ஒருவர் நெல்போலியன். கட்டுமஸ்தான உடம்பும் முருக்கு மீசையும் என பயங்கரமாக இருக்கும் இவர் சண்டை காட்சி எல்லாம் மிகவும் இயல்பாக நடித்து பெயர் பெற்றவர். நம்பும்படியாக புஜபலபராக்ரமசாலியாக கண்முன்னே நிற்பவர்.
தமிழில் நிறைய படங்களில் வந்தவர் தொடர்ந்து அரசியலும் நுழைந்து கவனம் செலுத்தி வந்தார். திமுக பிரமுகர் ஒருவரின் மிக நெருங்கிய சொந்தமான இவர், இப்போது திருமணம் ஆகி இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்திவரும் நெப்போலியன் கூடவே விவசாயமும் செய்து வருகிறாராம்.
நெப்போலியனின் மகன்களில் ஒருவரான தனுஷ் என்பவர் தசை சிதைவு நோய் எனும் கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், இவரின் கால்கள் 10 வயதிற்கு மேல் செயல்படாமல் இருக்கவே இவரால் நடக்க முடியவில்லையாம். பின் திருநெல்வேலி அருகில் பாரம்பரிய வைத்தியம் செய்து வரும் ஒரு நபரைக் பற்றி அறிந்து கொண்டு தனது மகனை அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு போதிய இட வசதி இல்லாமல் இருந்ததால், சிகிச்சைக்கு வரும் மக்கள் பலரும் கஷ்டப்பட்டு வருவதை கண்கூடே பார்த்து வருத்தப்பட்டுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அங்கு பெரிய மருத்துவமனை ஒன்றை கட்ட முடிவெடுத்துள்ளார் நெப்போலியன். அப்படித் தோன்றியது தான் இந்த மருத்துவமனை.
கடந்த 12 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நெப்போலியன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் வருகின்றனர். அதுமட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு சிகிச்சைக்காக வருகிறார்களாம். இங்கு வருபவர்களிடம் சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கப்படுவதில்லை என்றும் தகவல் உண்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…