சமீபத்தில் திருமணமான நடிகை கர்ப்பமானதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆலியா பட் கர்ப்பமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா படம், இயக்குநர் மகேஷ் பட்டின் மகள். முன்னணி நடிகையான இவர் சமீபத்தில்தான் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது.
இந்த காதல் பெற்றோர்கள் மனது வைக்க திருமணமாக நிறைவேறியது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி ஊரறிய இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர் ஆலியா பட், ரன்பீர் கபூர் இணை. இவர்களது திருமண விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவருமே இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில்தான் தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ஆலியா பட். தனது சமூக வலைத்தள பதிவில் அவர், எங்கள் குழந்தை விரைவில் வருகிறது எனக்கூறி மருத்துவமனை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஆலியா பட்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…