நம்ம சீயான் விக்ரம் தான் அது. பா. ரஞ்சித் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படமான இந்த படம் பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளது. சீயான் விக்ரமுக்கும் தனி பெயரைப் பெற்றுத் தரும் அளவுக்கு மிகவும் முக்கியமான படமாக அமையவுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் சார்பாட்டா பரம்பரை. இதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படத்தை காளிதாஸ் ஜெயராமை வைத்து இயக்கியிருந்தார். அந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் தனது பாணி படத்துக்கு தயாராகிவிட்டார் பா. ரஞ்சித்.
மகான் திரைப்பட வெற்றிக்கு பிறகு மீண்டும் நல்ல கதையில் நடிக்க வந்திருக்கிறார் விக்ரம். விக்ரமின் 61வது படமாக அமைந்துள்ள இந்த படம், கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க வயலின் கதையாக இருக்கப்போகிறது என்பதுதான் செய்தி.
பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் இருவருக்கும் கடைசியாக வந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனதால், திரையரங்குகளில் விக்ரம் ரசிகர்கள் பார்த்து குதூகலிக்கும் வகையில் சிறப்பான ஒரு படத்தை தயார் செய்து தருவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
3டி எனப்படும் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் மைதானம் என்பதாக இருக்கக்கூடும் என யூகங்கள் கிளம்பியுள்ளன. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…