சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் தி கேரளா ஸ்டோரி. கடந்த 5 ஆம் தேதி வெளிவந்த இப்படம் மிகப்பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்தது. உண்மை சம்பவத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இப்படம் ட்ரெய்லர் வெளியான போதே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.
அதைத்தொடர்ந்து படம் வெளியாக கூடாது என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை கையில் எடுத்தனர். இருப்பினும் சொன்ன தேதியில் படம் வெளிவந்தே தீரும் என பட குழுவும் பல முயற்சிகளை கையில் எடுத்தது. அதன் பலனாக பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைக்கு வந்தது.
இருப்பினும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தி கேரளா ஸ்டோரி மற்ற மாநிலங்களில் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி வரை கலெக்சன் பார்த்து பலரையும் வியக்க வைத்தது.
அது மட்டுமின்றி தற்போது படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் வரவேற்பு குறையாமல் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில், படக்குழு அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், படத்தின் ட்ரெய்லர் வந்ததில் இருந்து படத்தின் நாயகி அதா சர்மா மற்றும் இயக்குநர் சுதிப்டோ சென் ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாமல், இந்த நடிகை சிறிய சாலை விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, அதா சர்மாவிற்கு இன்ஸ்டாகிராமில் ‘jhamunda_bolte’என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மிரட்டல் கொடுக்கும் வகையில் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, அந்த கணக்கிலிருந்து அதா சர்மாவின் மொபைல் நம்பர் லீக் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, மொபைல் நம்பரை வெளியிட்ட நபர் அதா சர்மாவின் புது நம்பரையும் வெளியிடுவேன் என அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல், அதா சர்மாவின் ரசிகர்களை கொதித்தெழ செய்துள்ளது. தொடர்ந்து பலர் அந்த கணக்கை ரிபோர்ட் செய்ததால் அந்த கணக்கு இப்போது இன்ஸ்டா பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதா சர்மா, இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளதாவது, 'ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டால் அவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் நானும் இப்போது இருக்கிறேன். மற்றவருடைய வாழ்க்கைக்குள் நுழைந்து நிம்மதியை கெடுக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வக்ர புத்தியை வெளிகாட்டுகிறது. இது கேரளா ஸ்டோரி படத்தில் வரும் ஒரு சிறுமி கொடுமைப்படுத்தப்படும் காட்சியை எனக்கு நினைவூட்டுகிறது' என்று கூறியுள்ளார். மேலும், புது மொபைல் நம்பரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…