கில்லி படத்தில் வரும் பழம்பெரும் நட்சத்திரமான ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 ஆவது வயதில் இரன்டாவது திருமணம் செய்து கொண்டார். மே 25 ஆம் நாளான நேற்று, அசாமின் ரூபாலி பருவாவை மணந்தார்.
கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நடிகர் சூர்யாவுடன் ஆறு, ஆக்ஷன் கிங் அர்ஜூன் உடன் ஏழுமலை, ஜீவாவுடன் ஈ போன்ற படங்களில் வில்லன் பாத்திரத்தில் நடித்து வெற்றிகரமான நடிகராகத் திகழ்ந்தார். இவர் தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். முதல் திருமணமாக, இவர் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ராஜோஷி பருவாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கவுகாத்தியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 60 வயதில் இவர் அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலியை மணந்தார். மனைவி ரூபாலி கொல்கத்தாவில் உள்ள ஒரு உயர்தர பேஷன் கடையில் தொடர்புடையவர் ஆவார். இவர்களது திருமணமானது இரண்டு கலாச்சாரங்களின் கலவையில் நடைபெற்றது.
இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்தப் புகைப்படத்தில் கேரள பாரம்பரிய உடையில் ஆஷிஷ்-உம், அஸ்ஸாமிய உடையில் ரூபாலியும் தோற்றமளிக்கின்றனர். இந்த திருமணம் குறித்து ஆஷிஷ் தெரிவித்ததாவது, “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் ரூபாலியைத் திருமணம் செய்துள்ளது அசாதாரண உணர்வு. காலையில் சிறப்புத் திருமணம் செய்து, பின் மாலையில் நண்பர்களுடன் கெட் டு கெதர் நடத்தினோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதுமண தம்பதியர்களுக்கு இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…