ஆதிபுருஷ் படம் பொன்னியின் செல்வன் 2 வசூலை முறியடிக்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோனி சீதை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது
படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்குகளில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு திரையரங்கில் அனுமனின் புகைப்படம் போட்ட துண்டை சீட்டில் போட்டெக்கான் அதகளம் செய்திருந்தது திரையரங்கம். அதேபோல் ஹைதராபாத்தில் திரையரங்குக்கு குரங்குகள் வந்ததால் படத்தை பார்க்க அனுமன் வந்துவிட்டார் என ரசிகர்கள் கூறினர்.
படத்தை பார்த்தவர்களில் ஒரு தரப்பினர் படத்தின் முதல் பாதி சுமாராக இருக்கிறது என்றும், சிலர் இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஒருசிலரோ ஒட்டுமொத்த படமுமே திராபையாக இருக்கிறது என்று விமர்சனம் வைக்கின்றனர். அதேசமயம் விமர்சிப்பவர்களின் பொதுவான விமர்சனமாக இருப்பது படத்தில் இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள்தான்.கார்ட்டூன் காட்சிகளே பரவாயில்லை என்று ஓபனாகவே பேசிவருகின்றனர்.
படத்துக்கு கிடைத்திருக்கும் கலவையான விமர்சனத்தின் காரணமாக படத்தின் பாக்ஸ் ஆபிஸும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் நாளில் மொத்தமே உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய்வரை வசூலித்த அந்தப் படம் இதுவரை 160 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருப்பதாக கூறப்பபட்டது. ஆனால் இரண்டு நாட்களில் 250 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. இந்தச் சூழலில் படம் இதுவரை 300 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் மொத்தமாக வசூலித்த 345 கோடி ரூபாயை விரைவில் ஆதிபுருஷ் முந்திவிடும் என ரசிகர்கள் கூறுகின்றனர். 300 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டாலும் தமிழ்நாட்டில் அதன் வசூல் ரொம்பவே மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, படத்தில் அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனத்துக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பை பதிவு செய்து கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தொடர்ந்து வலுத்ததால் வசனத்தை மாற்றியமைக்கப்போகிறோம் என படக்குழு அறிவித்திருக்கிறது. ரசிகர்களின் எண்ணங்களையும் அவர்களது உணர்வுகளை மதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…