சென்னை: இசையமைப்பாளரும் இயக்குநரும் நடிகருமான கங்கை அமரன் நடிகை கனகா குறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கங்கை அமரன் ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் படத்தை இயக்கினார். அதில் நடிகையாக அறிமுகமானவர் கனகா. அவர் பிரபல நடிகை தேவிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கனகா நடிகையாக வருவதை தேவிகா விரும்பவில்லை என்றாலும் அவரிடம் சமாதானம் செய்து கனகாவை ஹீரோயினாக கமிட் செய்துவிட்டார் கங்கை அமரன்.
கரகாட்டக்காரன் படம் மெகா ஹிட்டான பிறகு அதிசய பிறவி, தங்கமான ராசா, பெரிய இடத்து பிள்ளை,துர்கா, எங்க ஊரு ஆட்டுக்காரன், அம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். அவரது கிராஃப் உச்சத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரது தாய் தேவிகா உயிரிழக்க ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார் கனகா. அவர் கடைசியாக தமிழில் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்தார்.
இதனையடுத்து அவரது தாயின் உயிரிழப்பு, அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக திரையுலகிலிருந்து ஒதுங்கி தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவரை யாராலும் பார்க்க முடியவில்லை. அவரும் யாரையும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கனகாவை கரகாட்டக்காரன் திரைப்படம் மூழல் அறிமுகப்படுத்திய கங்கை அமரன் கனகா குறித்து பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். கரகாட்டக்காரன் வெளியாகி 35 வருடங்களை நிறைவு செய்ததை ஒட்டி அவர் அளித்த பேட்டியில், கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், இன்றும் அந்த படத்தை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த படம் எனக்கு தானாக வருகிறார்கள்.
என்னுடைய அண்ணன் முதல் நாள் படம் பார்த்துவிட்டு அடுத்த நாள் ரெக்கார்டிங் பண்ணுவார். ஆனால், கரகாட்டக்காரன் படம் மட்டும் தான் கதை கேட்காமல் இசையமைத்து பின்னணி போட்டார். இந்த படம் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடியது. இதை பார்த்து என்னுடைய அண்ணனே அசந்து போய்விட்டார். அதுவும் கிளைமாக்ஸ்ஸில் வரும் மாரியம்மன் பாடலுக்கு தியேட்டரிலேயே பலரும் சாமி வந்து ஆடி இருந்தார்கள். இந்த அளவிற்கு இந்த படம் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவே இல்லை.அதற்கு கனகாவும் ஒரு காரணம்.
கனகாவின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அவர் எண்ணம் எல்லாம் அதில்தான் நிறைந்திருக்கிறது. ஏதோ ஒரு தோல்வியை அவர் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார். அதனால்தான் யாருமே வாழ்க்கையில் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். எனக்கு கனகாவை பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நேரத்தில்தான் ஆதரவு தர வேண்டும். ஆனால் அவர் அழைக்க மாட்டார்.
இந்த பேட்டியை பார்த்தாவது அவர் என்னை அழைக்க வேண்டும். வீட்டு கதவையும் பூட்டிவிட்டார். யாரும் உள்ளே போக முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. யார் சென்றாலும் அவருக்கு தெரியாது. சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார் என்பதுகூட தெரியவில்லை. வீட்டிற்குள் எப்படி போவது என்றே தெரியவில்லை. எதற்கு ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? பாவம்! அவரை எப்படி சரி செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை. பேசாமல் என்னை பார்சல் செய்து அவள் வீட்டுக்கு அனுப்பிவிடலாம்” என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…