ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், கடலூரில் அஜித்தை பார்த்தவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் ஸ்ரீபூவராக பெருமாள் கோவிலுக்கு அஜித் வந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த கோவிலுக்கு உடனடியாக படையெடுத்தனர். அந்த செய்தியில் இருப்பது உண்மைதான் என்பதை கோவிலுக்கு வந்து அஜித்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் மிக அருகில் சென்ற போதுதான் அது அஜித் இல்லை துணிவு கெட்டப்பில் இருந்த இன்னொரு நபர் என்பதை தெரிந்துகொண்டனர்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்களும் மிக ஆக்ரோஷமாக சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நொடியும் புது புது செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக அஜித் உண்மையிலேயே வந்திருப்பார் என ரசிகர்கள் நம்பியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…