கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைக்குட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை என்னும் பொன் நகையைத்தான்
முகமென்னும் வீட்டில் வைத்தேன் - உண்மையில் இவரது வரிகள் நம் கண்ணீர் துடைக்க வரும் கைக்குட்டையாகவும், நம்மை ஆளவும் செய்கிறது. நம் அனைவரின் முகத்திலும் புன்னகை மலரச் செய்யும் வாலியின் வரிகளை அவரே தனது பாட்டில் கூறியுள்ளார். வாருங்கள் இன்று நாம் பார்க்கவிருப்பது அன்பே ஆருயிலே படத்தில் இடம்பெற்றுள்ள வாலிப கவிஞர் வாலியின் வரிகளில் உருவான பாடல், அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே.....
ஏ ஆர் ரஹ்மான் இசையில், வாலி வரிகளில் 2005ம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே படத்தில் வரும் இந்த பாடல் வரிகளைப் பார்ப்போம்.
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைக்குட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை என்னும் பொன் நகையைத்தான்
முகமென்னும் வீட்டில் வைத்தேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே அன்பே ஆருயிரே
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…