Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஞ்சலியின் 50ஆவது படம் ஈகை.. பூஜை எப்போது தெரியுமா?

Aruvi Updated:
அஞ்சலியின் 50ஆவது படம் ஈகை.. பூஜை எப்போது தெரியுமா?Representative Image.

சென்னை: அஞ்சலி நடிக்கும் 50ஆவது படமான ஈகை படத்தின் பூஜை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு க்ளாசிக்காக இருந்ததை அடுத்து முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார் அஞ்சலி.

இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு,  சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய மெருகேற்றிக்கொண்டே சென்ற அஞ்சலி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டார்.

இந்தச் சூழலில் திடீரென அஞ்சலியை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக தமிழ் சினிமாவிலிருந்து சில காலம் காணாமல் போனார். அதனையடுத்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரீ என்ட்ரி கொடுத்த அஞ்சலி அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படத்தில் நடித்தார். இருப்பினும் அவருக்கு பழையபடி வாய்ப்புகள் சரளமாக கிடைக்கவில்லை.

அவர் இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் மூலம் எப்படி தன்னை மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினாரோ அதேபோல் ஏழு கடல் ஏழு மலை படமும் தனக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் அடுத்த ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் அஞ்சலி இருக்கிறார்.

இதற்கிடையே எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்யுடன் அஞ்சலி காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி திருவான்மியூர் கடற்கரையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி அங்கு இருவரும் சில காலம் ஒன்றாக தங்கியிருந்ததாகவும், பிறகு ஏற்பட்ட பிரச்னையால் அந்த வீட்டை அஞ்சலி காலி செய்துவிட்டார் என்று கோலிவுட்டில் தகவல் தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஞ்சலி தனது 50ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஈகை என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் அஞ்சலி, புகழ், பாரதிராஜா, ஹரி, அபி நக்‌ஷத்ரா,  நிஷாந்த் ரகு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்க க்ரீன் அம்யூஸ்மெண்ட் மற்றும் டி3 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் பூஜையானது 22ஆம் தேதி போடப்பட்டு அன்றைய தினம் ஷூட்டிங் தொடங்கும்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்