இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் லோஸ்லியா. அங்குள்ள தமிழர்களிடையே பிரபலமாகியிருந்தா் லோஸ்லியா. அவர் பேசும் அழகிய தமிழால் அங்குள்ள மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். இதைத் தொடர்ந்து உலக தமிழர்களிடையே பிரபலமாக முடிவு செய்து, பிக்பாஸ் வாய்ப்புக்காக காத்திருந்த லோஸ்லியா, பிக்பாஸ் வாய்ப்பு பெற்று அதில் கலந்துகொள்ளவும் செய்தார்.
இந்நிலையில்தான், பிக்பாஸ் வேறு ரூபத்தில் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். ஏற்கனவே கவின் மீது அபிராமியை காதலிக்க ஸ்க்ரிப்ட் எழுதி, அதை கவினை வைத்தே நிராகரிக்கச் செய்தார். பின் கவினுக்கு சாக்ஷி அகர்வால் மீது இன்ட்ரஸ்ட் வர வைத்து, அதையும் பிரித்து கவினை லோஸ்லியாவுடன் கோர்த்துவிட்டார். இந்த காதல் நிலைத்து நிற்கும் என எதிர்பார்த்த நிலையில், பிக்பாஸ் முடிந்த கையோடு காதலுக்கும் எண்ட் கார்டு போடப்பட்டது.
இந்நிலையில், பிக்பாஸ் தர்ஷனுடன் சேர்ந்து ஒரு படமும், ஹர்பஜன் சிங்குடன் ஒரு படமும் தமிழில் பணிபுரிந்தார். இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக தன் பாதையை மாற்றியுள்ளார் லோஸ்லியா. தற்போது கவர்ச்சிக் கடலாகி தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…