Bharathi Kannama Today Episode: மக்களே போதும் போதும் அடுத்த கான்செப்டுக்கு போங்கன்னு சொல்ற வரைக்கும் எபிசோடுகளை கொண்டு செல்லும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடரில் தற்போது தீவிரவாதம், ஹைஜாக், துப்பாக்கி சூடு, பெண்கள் பாதுகாப்பு என்று நடைமுறையில் நடக்கும் சம்பவங்களை காண்பித்து கொண்டிருக்கின்றனர்.
அப்படியாக இன்றைய எபிசோடில் நடக்கும் சம்பவங்கள் இது தான். பாரதி கண்ணம்மா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள் புகுந்து தங்களின் கோரிக்கையை அரசாங்கத்திடம் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே, காவல் அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. படத்துல கூட இவ்ளோ கோரிக்கை வச்சிருக்க மாட்டாங்க. பாருங்க 20 தீவிரவாதிகள், 1000 கோடி பணம் அப்புறம் தப்பிச்சு போக வாகனம் இவ்ளவும் வேணுமா? இவங்கள என்ன பண்றது.
அதுனால போலீஸ் உங்க டிமாண்ட் அதிகமா இருக்கு மேலிடம் அதுக்கு இதுக்கலைனு சொல்லிட்டாங்கன்னு தீவிரவாதிகிட்ட சொல்லிட்டாங்க. உடனே அவரு ரொம்ப கடுப்பாகி, ஹேமாவ கூட்டிட்டு போக, லட்சுமி வந்து தடுத்து அவகூட என்னையும் கூட்டிட்டு போங்கன்னு சொல்றா. அங்க போய் நாங்க கேக்குறத உங்க அரசாங்கம் தரலைனா ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ உள்ள இருக்குறவங்கள கொன்னு வீசுவோம்-ன்னு மிரட்றாங்க. உள்ள போன உடனே லட்சுமி ஹேமா தூங்கிட்டு இருக்காங்கனு நினைச்சு கண்ணம்மா, அஞ்சலி உண்மைய சொல்லிட்டு இருகாங்க. அதாவது ஹேமாவும் லட்சுமியும் ஒண்ணா பொறந்த ரெட்டை பிறவிங்கனு லட்சுமிக்கு தெரிஞ்சிடுச்சு. அவ சந்தோஷத்துல தூங்கிட்டு இருக்கிற ஹேமா கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்கிறாள்.
மறுபக்கம் கண்ணம்மா போட்டு தள்ளிய தீவிரவாதியின் பாடில ஹாஸ்பிடல்ல இருக்கும் ரகசிய பாதையை போலீசிக்கு தெரிவிக்கும் வகையில் லெட்டர் ஒன்று எழுதி மறைத்து வைக்கிறாள். அதை பார்த்ததும் மகிழ்ந்த போலீசார் அடுத்த ஆக்ஷன் காட்சிக்கு ரெடி ஆகுங்க என்று சொல்கின்றனர். பார்க்கலாம் இனி அடுத்த என்னெல்லாம் செய்ய காத்திட்டு இருக்காங்களோ என்று.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…