Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

போட்டியாளர்களை இறுதிக் கட்டத்திற்குத் தயார் செய்யும் பிக்பாஸ்..! புதிய டாஸ்கால் பரபரப்பில் பிக்பாஸ் வீடு..!

Editorial Desk Updated:
போட்டியாளர்களை இறுதிக் கட்டத்திற்குத் தயார் செய்யும் பிக்பாஸ்..! புதிய டாஸ்கால் பரபரப்பில் பிக்பாஸ் வீடு..!Representative Image.

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 8 போட்டியாளர்களே மீதம் இருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் விதமாக பிக்பாஸ் அதிரடியான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 85-வது நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில் வீட்டின் கேப்டனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த போட்டியில் அசீம் மற்றும் ஏ.டி.கே ஆகிய இருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதில் புது விதமாகப் போட்டியாளர்கள் இருவரும் விவாதம் செய்து யார் கேப்டன் பதவிக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்ய வேண்டும்.

பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக அதிரடி மன்னன் அசீம் தான் போட்டியில் வெல்லப் போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில், ஏ.டி.கே அசீமிடம் நீங்கள் வீட்டில் அதிகமாகக் கோபப்படுகிறீர்கள். எனவே நீங்கள் கேப்டன் பதவிக்குத் தகுதியே இல்லாதவர் என்று தனது வாதத்தை முன் வைக்கிறார். இதனைக் கேட்ட அசீம் சரி நீங்களே கேப்டனாக இருங்கள் என்று கூறி விட்டுக் கொடுப்பதைக் காண முடிகிறது.

இது என்ன அசீமின் புது விளையாட்டு யுக்தியா..? என்று சிலரும், இல்லை பிக்பாஸ் போட்டி முடியும் நிலையில் இருப்பதால் அசீம் மாறிவிட்டாரா.? என்றும் சில ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதன் பின் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை அளித்து அதில் வெற்றி பெரும் ஒருவருக்கு இந்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறுகிறார்.

அதன் பின்பு தான் தெரிகிறது அந்த டாஸ்கில் உள்ள டுவிஸ்ட், போட்டியாளர்கள் அனைவரும் தனித் தனியாக இந்த வீட்டில் தொடர்ந்து பயணிப்பதற்காக தங்களின் தனித்துவத்தைப் பற்றிக் கூற வேண்டும். இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களை பிக்பாஸ் வைத்துச் செய்வதை ப்ரோமோ காட்சிகளில் பார்க்க முடிகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் போட்டியாளர்களின் நடவடிக்கையைப் பார்த்து பிக்பாஸிகே கோபம் வந்து விட்டது என்று கலாய்த்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இறுதியாக வெளியான ப்ரோமோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான  மாத்தி யோசி விளையாட்டைப் போல் ஒரு டாஸ்க்கை அளித்துள்ளார். பிக்பாஸ் அதில் அனைவரும் ஆனந்தமாகக் கலந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. இந்த பிக்பாஸ் சீசன் மிகவும் போரிங் சீசன் என்ற பெயரை வாங்கினாலும் இறுதியாக யார் தான் வெற்றியாளர் என்பதைக் காண வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்