விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 60-நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும் புதிய திருப்பங்கள் போட்டியாளர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், புதிய டாஸ்குகள் என இந்த பிக்பாஸ் போட்டிக்களம் சூடுபிடிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் அவர்கள் எப்படி நடித்தார்கள், மேலும் அவர்கள் நடிப்பால் மற்ற போட்டியாளர்களை கவர்ந்தார்களா என்ற அடிப்படையில் விருது வழங்கும் நிகழ்வு நடப்பது தெரியவருகிறது.
இந்த நிகழ்ச்சியை கதிர் மற்றும் தனலட்சுமி தொகுத்து வழங்குகிறார்கள். அடுத்தாக விக்ரமனுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எப்படி நடித்தார் என்ற விவாதம் எழுகிறது. விக்ரமன் தனக்கு கொடுக்கப்பட்ட கண்ணியன் கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த வரை சிறப்பாகவே பங்களித்ததாக கூறுகிறார். அதனை மறுத்து பேசும் மணிகண்டா, விக்ரமன் தனது கதாபத்திரத்தில் நன்றாக நடிக்கவில்லை. இதுவே தனக்கு இந்த கண்ணியன் கதாபாத்திரம் கிடைத்திருந்தால் அனைத்து விருதுகளை நானே வாங்குமளவிற்கு சிறப்பாக நடித்திருப்பேன் என்று அவரது கருத்தை கூறுகிறார்.
இந்த வாரம் முழுவதும் பெரியதாக சண்டை ஏதும் நிகழாமல் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விருது வழங்கும் நிகழ்வில் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த டாஸ்கின் மூலம் புதியதாக விக்ரமன் மற்றும் மணிகண்டா இருவருக்கும் நடக்கும் வாக்குவாதமும் சண்டையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காணும் நேயர்களுக்கு இப்போதாவது போட்டியை புரிந்துகொண்டு தனித்துவமாக விளையாடுகிறார்கள் என்ற நிம்மதியை தரும்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி நிகழ்ச்சியை காணும் நேயர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்களா..? கேள்வியுடன் இன்றைய எபிஸோடை பார்த்து போட்டியாளர்கள் விழித்து கொண்டார்களா? இன்னும் அமைதியோடு உல்லாசமாக சுற்றுலா வந்ததைப் போல் இருக்கிறார்களா? என்பதை அறிவோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…