பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், திருநங்கையாக ஷிவின் கணேசன் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவுடன் நடந்த உரையாடலில், இவரது காதல் கதையைப் பகிர்ந்துள்ளார். இது கேட்போரை கண்கலங்க வைப்பதாகவும் உள்ளது. அப்படி ஷிவின் என்ன கூறினார் என்று இப்போது பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுள் ஒருவராக ரச்சிதாவும் உள்ளார். இவரிடம், ஷிவின் தனது காதல் கதையையும், அவரின் உறவினர்கள் குறித்தும் கூறியுள்ளார். இதில் ஷிவின் கூறியதாவது, “என சொந்த ஊரில் நாங்க ஒன்றாக கோவில்களுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் செல்வோம். எங்கள் ஊரில் உள்ள அனைவருக்குமே எங்கள் உறவு பற்றி தெரியும். அவர்கள் எல்லாருமே எங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை. ஆனால், என் அம்மா அதற்கு ஒரு போதும் சம்மதிக்கவில்லை. என்னை வற்புறுத்தினார். நான் திருநங்கை என்பதால், அவனுடன் இருந்ததற்காக, அவனின் பெற்றோர்கள் என்னை சபிப்பார்கள்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
முன்னரே, இது குறித்து அவர் பேசும் போது, “அவருடன் என் அம்மான என்னை வறுத்தியதால் தான் நான் இறுதியில் அவ்வாறு செய்தேன். இப்போது அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். ஆனால், அவர் சில போதை பழக்கங்களை வளர்த்துக் கொண்டார் என நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.” என்று உணர்ச்சி வசமாகக் கூறினார்.
அதே போல, அவர் வீட்டில் அனுபவித்துள்ள கொடுமைகளைக் குறித்தும் கூறினார். இதில், நான் ஒரு அறையில் பூட்டப்பட்டேன். என்னை அறையை விட்டு வெளியே விடவில்லை. அவர்கள் கதவின் ஒரு சிறிய இடைவெளியில் தான் உணவு தருவர். எனது சொந்த வீட்டிலேயே யாரையும் சந்திக்கக் கூட எனக்கு அனுமதி இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை அடித்தனர்” எனக் கூறினார்.
ஷிவினின் உணர்வுப் பூர்வமான அவருக்கு நேர்ந்த கொடுமைகள் கேட்போரை அழ வைப்பதுடன், பல்வேறு இடங்களில் திருநங்கைகளுக்கு இப்படி தான் நடக்கிறது என்பதை எடுத்துக் கூறுவதாகவே அமைகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…