இப்ப தான் எப்படியோ கொஞ்ச நாள் பிரச்சனைய தள்ளி போடலாம்னு நினைச்சு எல்லாம் ஊருக்கு வந்தா அங்கேயும் உட மாட்டேங்கிறாங்க. கார்த்தி அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு கார்த்திக்கை தவிர எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்க. அங்க நிஜமாவே தன்னுடைய புருஷனுக்கு உடம்பு சரியில்லைன்னு கார்த்தி அம்மா விரதம், பிராத்தனைன்னு செஞ்சிட்டு இருக்காங்க. இதை பாக்க பாக்க சுந்தரிக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
அப்புறம் சூர்யா, கார்த்தி அக்கா ரெண்டு பேரும் வந்து விசாரிச்சிட்டு சுந்தரிக்கு இப்படி ட்ரெயினிங் இருக்குன்னு சொல்றாங்க. அதுக்கு கார்த்திக்கை வர சொல்லி கூட்டிட்டு போக சொல்லுங்கன்னு மாமனார் கிட்ட கேக்குறாரு சூர்யா. இதை கேட்டதும் கோவம் வந்து அவங்க மாமியார் அவன் வர மாட்டான், அவனுக்கு அவனுடைய சந்தோசம் மட்டும் தான் முக்கியம்னு சொல்லிட்டு இருக்காங்க. எல்லாரும் எங்க சூர்யாக்கு இந்த விஷயம் தெரிஞ்சிறுமோன்னு பதறுறாங்க. அப்புறம் எப்படியோ எதையோ சொல்லி சமாளிச்சிட்டாங்க. ஆனா அவருக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்குது.
சுந்தரியோ இப்போதெய்க்கு இந்த பிரச்சனை வளராம பாத்துக்கிட்டோம், இந்த ட்ரெயினிங் எனக்கு ரொம்ப முக்கியம். இனிமே அதுல கவனம் செலுத்தணும்னு ஆர்வமா இருக்கா. அங்கிட்டு பாத்தா அனு மேடத்துக்கு ரொம்ப மன உளைச்சலா இருக்காம், அதுனால் கொஞ்ச நாள் கொடைக்கானலுக்கு போலாம்னு பிளான் பண்றாங்க. சுந்தரிக்கும் அங்க தான் ட்ரெயினிங், இன்னும் என்னெல்லாம் நடக்குமோ வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…