பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு விக்ரமன் முதல் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள அவர் கூடவே தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சைகளும் கொண்டாட்டங்களும் நடந்தேறின. முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மக்களின் முடிவு என்பதால் இதனை ஏற்றுக் கொள்வதாக விக்ரமன் பேசியிருந்தார். முடிவில் அறம் வெல்லும் எனவும் கூறியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பல இடங்களில் இந்த அறம் வெல்லும் வார்த்தைகளைப் பேசியிருந்தார் விக்ரமன். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு, வெளியே வந்து வீடியோ வெளியிட்டுள்ளார் விக்ரமன்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து பேசி அவர், தனக்கு கிடைத்த ஆதரவால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பா பொங்கல் தினத்தில் வீட்டு வாசல்ல போடப்பட்ட கோலத்தில் அறம் வெல்லும் வாசகம் இடம் பெற்றிருந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்றார்.
இந்த வீடியோ நன்றி தெரிவிப்பதற்காக மட்டுமல்ல, நான் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேச போகின்றேன். விரைவில் நாள், இடம் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…