காசோலை கோல்மால் வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்.
அக்ஷய் சரின் எனபவர் நீதிமன்றத்தில் அவர்கள் மீது மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "நான் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர். எனக்கு தர வேண்டிய பணத்திற்காக துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் காசோலை ஒன்று தந்தனர். வங்கியில் பணம் இல்லாததால் அந்த காசோலை பௌன்ஸ் ஆகிவிட்டது. நான் நிறைய முறை கேட்டும் பணத்தை அவர்கள் திரும்ப தரவில்லை. மேலும் இந்த பணத்திற்கு ராம்குமார் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே, இந்த மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் எழுதியுள்ளார்.
வழக்கு விசாரனைக்கு வந்த பிறகு நீதிமன்றத்தில் துஷ்யந்த், அபிராமி, ராம்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த விசாரணையை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…