கணவரை இழந்த சோகத்தை முழுசாக மறக்காத நிலையிலேயே மீனாவுக்கு மறுமணம் ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இது ரசிகர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மீனாவும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையான மீனா மார்க்கெட் குறைந்ததும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கணவர், குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவரது தலையில் இடி விழுந்தது போல கணவரின் மரண செய்தி அமைந்தது.
இந்த துக்க நிகழ்விலிருந்து மீண்டு வருவதற்குள் அவரின் குடும்பத்தார் குழந்தையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மீனாவுக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீனாவே அதிர்ச்சியில் இருக்கிறாராம். காரணம் அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்கிறார்கள்.
குழந்தையின் நலனுக்காக மறுமணம் செய்வதில் தவறில்லை என்றாலும் அந்த முடிவை எடுக்க வேண்டியது மீனாவே அன்றி வேறு யாரும் இல்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…