விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் மூலமாக முல்லையாக நம் மனதில் நீங்கா இடம் பிடித்த வி ஜெ சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையில் பிரபல ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக செய்தி வெளிவந்து காலப்போக்கில் நம் நினைவில் இருந்து மறைந்தது. ஆனால் சித்ராவின் தாயார் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
சித்ரா மரணத்தின் விசாரணை
சித்ராவின் தாயார் தொகுத்த வழக்கின் பெயரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது தீவிர விசாரணை நடத்தபட்டது. ஆனால், சித்ராவின் கணவர் தரப்பில் அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்ததாக விசாரணையில் வெளிவந்தது.
விசாரணை நடந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் காரணம், அவர்களின் பண பலத்திற்கு முன்னாள் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும், என் மனைவி சித்ராவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் எண்று ஹேம்நாத் கூறினார்.
மிரட்டல்
ஜாமினில் வெளிவந்த ஹேம்நாத் கடந்த 25ம் தேதி போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன் உயிருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக புகார் அளித்துள்ளார். தன் மனைவி இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டணைக் கிடைக்கும் வரை உயிறோடு இருக்க ஆசைபடுவதாகவும், தன் மனைவியைக் கொலை செய்தவர்களிடம் இருந்து பண பறிக்கும் கும்பல் தன்னை மிரட்டுவதால் தன் வழங்கறிஞர் வீட்டில் உயிருக்கு பயந்து தங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தன் மனைவி இறப்பிற்கு காரணமானவர்களின் அடையாளத்தை விரைவில் வெளியிடுவேன் என்று புகாரில் ஹேம்நாத் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…