தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான சீயான் விக்ரம். கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தார். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து மகான் திரைப்படத்தை கொடுத்தார். அதிலும் வழக்கம்போல அவரது நடிப்பு பேசப்பட்டாலும், ஓடிடியில் வெளியானதால், ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை. இதுகுறித்து விக்ரமும் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்களுக்கு பெரிய டிரீட் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பெரிய படங்களை ஒப்பந்தம் செய்தார்.
கதைகளைக் கேட்டு நடிப்பதுதான் விக்ரமின் மைனஸாக இருந்தது. அவரது உழைப்புக்கு ஏற்ற வரவேற்பு இங்கு கிடைக்கவில்லை என பேசப்பட்ட நிலையில், இப்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், பா ரஞ்சித் படம் என அடுத்தடுத்து மெகாஹிட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். நிச்சயம் இந்த இயக்குநர்களின் படங்கள் சோடை போகாது என்பதால் ரசிகர்களும் உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் கோப்ரா படமும், செப்டம்பரில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பா ரஞ்சித் படத்தில் மும்முரமாக இருக்கிறார் சீயான். இதுவரை டிவிட்டரில் இல்லாத சீயான் விக்ரம், தற்போது டிவிட்டர் கணக்கைத் துவங்கியுள்ளார்.
அவரது டிவிட்டர் ஐடி இதோ
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…