நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் மிகப் பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். மார்க்கெட் பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்ட பிறகும், திருமணமான பின்பும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பது, கவர்ச்சி காட்டுவது, கவர்ச்சி ஃபோட்டோ ஷூட்டுகளுக்கு போஸ் கொடுப்பது என ரசிகர்களையும் மகிழ்வித்து வருவதை தொடர்ந்துதான் வந்தார் சமந்தா. ஆனால் என்னமோ தெரியவில்லை இனி அப்படி நடிக்கமாட்டேன் என தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம்.
தமிழில் பிரபல நடிகை சமந்தா. இவர் நான் ஈ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பலப்படுத்திக் கொண்டார். திருமணமான பிறகும் இப்போது விவாகரத்து ஆன பிறகும் தனது குறிக்கோளை சரியாக வைத்திருந்தவர், கவர்ச்சி காட்டவும் தயங்கவில்லை.
இந்நிலையில்தான், தான் நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சேதி கூறியுள்ளார். இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முத்தக்காட்சிகள், நெருக்கமான காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என்கிறாராம் அதற்கு சம்மதிக்கும் தயாரிப்பாளர்களிடம் மட்டுமே திரைப்பட ஒப்பந்தம் செய்கிறார் என்கிறார்கள்.
யசோதா திரைப்படத்தின் டிரைலர் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…