Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா உறுதி...? மருத்துவமனையில் அனுமதி..!

Muthu Kumar July 19, 2022 & 09:45 [IST]
இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா உறுதி...? மருத்துவமனையில் அனுமதி..!Representative Image.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட முன்னணி இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்