பெற்றோர் திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், பிரபல தமிழ் பாடலாசிரியர் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருந்து வரும் கபிலன், சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தமிழில் கில்லி படத்தில் அர்ஜூனரு வில்லு உள்பட பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.
Also Read: தற்கொலை எண்ணங்க்ளை தவிர்ப்பது எப்படி?
28 வயதான இவரது மகள் தூரிகை, எம்பிஏ படித்து முடித்து எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று பன்முகத் திறமையுடன் தனக்கென ஒரு தனித்த அடையாளத்துடன் வளர்ந்து வந்தார். மேலும் பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது தற்கொலை முயற்சியைக் கண்டா அவரது அம்மா உஷா, அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து எனது மகளை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார்.
Also Read: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை முடிவல்ல...
சத்தம் கேட்டு ஓடிச்சென்று தூரிகையை மீட்ட அக்கம்பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தூரிகையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முதற்கட்டமாக பெற்றோர் தூரிகையை திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், அதில் விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு இது தான் காரணமா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…