Cine News : இசையமைப்பாளர் டி இமான் தனது 2ம் திருமணத்திற்கு பிறகு தனது இரு மகள்களுக்காக காத்திருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
டி.இமான்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சின்னத்திரையில் தனது இசைப் பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித் திரையில் அசத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
விவகாரத்து
இந்நிலையில், இசையமைப்பாளர் டி.இமான் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவியை சட்டப்படி விவகாரத்து செய்தார். இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அமலி உபால்டு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரபட்டது.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் தனது மறுமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த இமான், இரண்டாவது மனைவியின் குழந்தையான நேத்ராவின் தந்தையாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த இந்த திருமணம், கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து அமலியை எனக்கு அறிமுகம் செய்த எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
சொந்த மகள்கள் குறித்து உருக்கம்
மேலும், இத்தருணத்தில் எனது சொந்த மகள்களான வெரோனிகா மற்றும் பிளக்சிக்கா ஆகியோர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் அவர்களை மிஸ் செய்கிறேன். ஒரு நாள் என் மகள்கள் தன்னைத் தேடி வருவார்கள் அப்பொழுது மனைவி அமலி மற்றும் மகள் நேத்ராவுடன் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.
நன்றி
இந்த திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்த எனது குடும்பத்தினருக்கும் இத்தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன் என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…