தமிழ்நாடு புகையிலை கட்டுப்பட்டு அமைப்பு நடிகர் தனுஷ் நடித்த "வேலையில்லா பட்டதாரி" படம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசிடம் புகார் ஒன்று அளித்திருந்தது. அதில் அந்த படத்தில் புகைபிடித்தல் தடுப்பு குறித்த விளம்பரங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும், அதிகமாக புகை பிடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்தது என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் மீதான விசாரணையின் போது சுகாதாரத்துறை இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு வழக்கு தொடர்ந்து வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், ஆஜராவதற்கு தடை கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதி தள்ளிவைத்து.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…