தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர்தான். எஸ் எஸ் ராஜமவுலிக்கு முன்பே இங்கு பல பிரம்மாண்டங்களைக் காட்டியவர் இவர். கடைசியாக 2.0 படத்தை இயக்கிவிட்டு அந்த படம் நஷ்டமானதால் கொஞ்சம் கேப் விட்டு இந்தியன் 2 படத்தை இயக்கினார். அந்த படமும் மிகப் பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ள அடுத்து தெலுங்கு பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.
ராம்சரணுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான ஒரு படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். துரித கதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது கனவு திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க நீருக்கடியில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதை ஒன்றை திட்டமிட்டு வைத்திருக்கிறாராம் அவர். சுமார் 1000 கோடி செலவில் இந்த படத்தை எடுக்கலாம் என நினைத்துள்ள ஷங்கர், இந்த படத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களிடம் பேசிவிட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…