பொன்னியின் செல்வன் 1 பாகம் இன்னும் இரண்டு நாட்களுள் உலகளவில் வெளியாக உள்ளது. திரைக்கு வருவதற்கு முன்பு ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் படத்தின் நடிகர்கள் சென்று வருகின்றனர். மனிதனின் அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளடக்கி மொத்தம் 6 பாடல்கள் வெளியாகியுள்ளது. படம் ரிலீஸ்-க்கு முன்னரே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 1 படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது " வாரிசு படப்பிடிப்பில் பொன்னியின் செல்வன் படம் பற்றி விஜய் அவர்கள் உங்களிடம் ஏதாவது பேசுவாரா?" என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு சரத்குமார் அவர்கள் தளபதி விஜய்க்கு நமது ஏ.ஆர். ரஹ்மான் பாடிய "பொன்னி நதி" பாடலை தான் எப்போதுமே அவர் முணு முணுத்துக் கொண்டே இருப்பார் என்று கூறினார்.
எனவே, வாரிசு படப்பிடிப்பில் தளபதி விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல் இப்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…