பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா, தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இந்த நிறுவனம், ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்', ரஜினிகாந்தின் '2.0', அல்லு அர்ஜுனின் 'புஷ்பா', தனுசின் 'வடசென்னை' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போது ரஜினி - த.செ ஞானவேல் படம், அஜித்தின் விடாமுயற்சி படம் என பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்திருந்தது. இப்படத்தின் மூலம் அதிக லாபத்தை (300 கோடி) ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த வருவாயில் கணக்கு முறையாகக் காட்டவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் நடைபெற்ற இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில், அமலாக்கத்துறையினர் கைப்பற்றும் ஆவணங்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.
ஆனால், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் ரூபாய் 1 கோடி அளித்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்திற்கு லைகா நிறுவனம் 8.5கோடி ரூபாய் வழங்கியுள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரிடத்திலும் விசாரனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…