Eeramana Rojave 2 Today Episode: எங்க நாலு பேரோட வாழ்க்கையை நாசம் பண்ணது தேவி தான், நிரூபித்த ஜீவா. அடுத்த நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள்.
தேவி பிறந்த நாள் அன்று ஜீவா போட்டு உடைத்த உண்மை. பார்த்திபன் பிரியா கல்யாணம் அன்று நரேனை தூண்டிவிட்டு பிரியாவை கடத்த சொன்னது தேவி தான் என்ற உண்மையை ஜீவா எல்லாத்துக்கும் முன்னாடியும் சொல்றான். ஆனா அவங்க அப்பா அக்கா மேல இருக்குற பாசத்துனால அத எதையும் நம்பள. தேவியும் எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சமாளிக்கிறாள். அதுனால அருணாச்சலம் ஜீவாவ வீட்ட விட்டு வெளில போக சொல்லிட்டாரு.
அப்ப கரெக்ட்டா காவ்யா நரேனை கொண்டு வந்து நிப்பாட்டுறா. அப்புறம் எல்லா ஆதாரத்தையும் ஜீவாவும் காவ்யாயும் காமிக்கிறாங்க. நமக்கு தான் தெரியுமே, தப்பி பண்ணி மாட்டிக்கிட்டோம்னா ஒத்துக்கவே மாட்டோமே. அதே போல தான் தேவியும் இவன் யாருன்னே தெரியாது, நான் எதும் பண்ணலன்னு உள்ள ஓடி போய் ஒளிஞ்சிக்கிறாங்க. அப்புறம் கொஞ்சம் நேரத்துல போலீஸ் வீட்டுக்கு வராங்க. அப்புறம் தேவிய வலுக்கட்டாயமா கூட்டிட்டு போகும் போது, இவங்க பேசாம போயிருக்கலாம்.
ஆனா மேடம் ரொம்ப துள்ளி குதிச்சிட்டு போகும் போது கால் கொஞ்சம் ஸ்லிப் ஆகி பாவம், ஜீவா பார்த்திபன் அப்புறம் அருணாச்சலம் இவங்க மூனு பேர் கால்லையும் உளுந்திடுறாங்க. அப்ப பாக்கணுமே அவங்களோட மொகத்த, இனி இவங்க குடும்பத்தை நிம்மதியா இருக்க விடமாட்டேன்னு அவங்க எடுக்கும் சபதம் கண்ணுலையே தெரியுது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…