Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Eeramana Rojave 2 Serial: காவ்யா கேட்ட விவகாரத்தை கொடுத்த பார்த்திபன்...ஆனால் அதுக்கு ஒரு கண்டிஷன்! அதற்கு காவ்யா சொன்ன பதில்!

Priyanka Hochumin May 27, 2022 & 19:35 [IST]
Eeramana Rojave 2 Serial: காவ்யா கேட்ட விவகாரத்தை கொடுத்த பார்த்திபன்...ஆனால் அதுக்கு ஒரு கண்டிஷன்! அதற்கு காவ்யா சொன்ன பதில்!Representative Image.

Eeramana Rojave 2 Serial: இந்த வார ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிரியா பிறந்த நாளுக்கு ஜீவா கொடுத்த பரிசு, துரை செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்குச் செல்வது, பார்த்திபன் காவ்யா கேட்கும் விவகாரத்தை கொடுப்பது என்று ஏகப்பட்ட ட்விஸ்ட் நடந்துள்ளது.

கடந்த எபிசோடுகள் | Eeramana Rojave 2 Serial

இந்த வாரம் பிரியா தனது பிறந்த நாளை அவள் நடத்தும் ஹோமில் கொண்டாட ஆசை படுகிறாள். அதற்கு ஜீவாவை தன்னுடன் வருமாறு கேட்கிறாள், அவனும் சரி என்று சொல்லி விட்டு செல்கிறான். பிறகு இவர்கள் கட்டும் கட்டடத்தின் மேல் மாடியில் பார்த்திபன் நுனியில் நின்று கொண்டு யோசிக்கிறான். அங்கே வேலை செய்யும் அனைவரும் பதறி போக, ஜீவா வேகமாக போய் பார்த்திபனை பின்னே இழுத்து பேசுகிறான். பார்த்திபன் காவ்யா தன்னிடம் விவாகரத்து கேட்கிறாள் என்று சொல்கிறான். இதனை கேட்டதும் மன வேதனையில் மது அருந்துகிறான் ஜீவா. அங்கு பிரியா ஜீவாவுடன் பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள். ஜீவா இங்கு இருப்பதை தெரிந்த பிறகு அழுது கொண்டே அவனை அழைத்து வர செல்கிறாள்.

அடுத்த நாள் காலையில் ஜீவா எழுந்ததும் சாரி கேட்கிறான், அப்போது பிரியா நேத்து தான் ஒன்னு தெரிஞ்சிகிட்டேன். நீங்க குடிசிட்டு விழுந்து கடந்தத பாத்துட்டு என்னையே அறியாம நான் அழுதேன், அப்ப தான் உணர்ந்தேன் உங்க மேல பாசம் வைக்க ஆரம்பிச்சிட்டேன்னு. அப்புறம் இன்னொரு விஷயமும் தெரிஞ்சிது, நான் அவ்ளோ சொல்லியும் நீங்க குடிச்சதுக்கு அர்த்தம் என்னைய மனைவியா இல்ல ஒரு பிரெண்டா கூட ஏத்துக்கலன்னு நல்லா புரிஞ்சது என்று அழுகிறாள். கீழே பிரியாவுக்கு பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடுகள் நடக்க, அவளின் பெற்றோர் மற்றும் தங்கை வருகிறார்கள். ஜீவா பிரியாவுக்கு எந்த பரிசும் வாங்காததால் பார்வதி வாங்கி வைத்திருந்த ரிங்கை கொடுத்து ஜீவாவை போட்டு விட சொல்கிறாள். இருப்பினும் ஜீவா வருந்தி பிரியாவுக்காக கேசரி மற்றும் பொறி உருண்டை செய்து கொண்டு எடுத்துச்செல்கிறான்

பிரியா மகிழ்ச்சியுடன் அதான் ரிங் கொடுத்தீங்களே இது எதுக்கு என்று கேட்க? ஜீவா உண்மையை கூறிவிட்டான். அது நான் வாங்கல அம்மா தான் குடுத்து போட்டு விட சொன்னாங்க. எனக்கு மனசு கேட்கல அதான் சாரி அப்படியே கேட்காம உங்களுக்கக இத செஞ்சி எடுத்துட்டு வந்தேன். பிரியாவுக்கு பயங்கர சந்தோசம், ஒரு நேர்மையான மனுஷன் எனக்கு புருஷனா கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம் என்று கூறுகிறாள். இதை கேட்டதும் ஜீவா அவளை வியந்து பார்க்கிறான். பிறகு ஜீவா பிரியாவுக்கு கேக் ஊட்டிவிட்டது, ரிங் கொடுத்ததை பார்த்து காவ்யா விரக்தியில் அழுகிறாள். பார்த்திபன் என்ன என்று தெரியாமல் அவளிடம் கேக் கொடுக்க வருகிறான், அவனை திட்டி வெளியே அனுப்புகிறாள் காவ்யா.

இன்றைய எபிசோடு | Eeramana Rojave 2 Today Episode

இப்படி நடந்து கொண்டிருக்க துரையின் மேனேஜர் கோல்மால் வேலை செய்து அதிக பணத்தை லவட்டி கொண்டு தலை மறையாகி விட்டான். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் துரையின் கம்பெனியை அடித்து நொறுக்கி விட்டு துரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் துரையை கைது செய்து அழைத்து செல்கின்றனர். ஒரே பரபரப்பான சூழலில் மஹா, அருணாச்சலத்திற்கு போன் செய்து நடந்ததை கூற அவர் போலீஸ் ஸ்டேஷன் வருகிறார். ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணீர் விட, ஜீவா பார்த்தி இதக்ரு காரணமான அந்த மேனேஜரை கண்டுபிடுக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

அந்த களவாணி இருக்கும் இடம் தெரிந்ததும் ஜீவா மற்றும் பார்தி அங்கு சென்று செம்ம மாஸ்ஸான ஆக்ஷன் பிளாக் கட்டிவிட்டு அவனை பிடித்து வருகின்றனர். அதே சமயத்தில் இங்கே நேரம் கடக்க துரையை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லகிறார்கள். சரியான தருணத்தில் ஜீவா பார்த்தி பணத்தையும் மேனேஜரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிரியா மற்றும் காவ்யா, ஜீவா மற்றும் பார்த்திபனுக்கு நன்றி சொல்லி கண்ணீர் விடுகின்றனர். துரை என்னுடைய மாப்பிளைங்க ரெண்டு பெரும் என்னுடைய குடும்பத்தையும் மனதையும் காப்பாத்திட்டாங்க என்று நன்றி சொல்கிறார்.

இதற்கான மாஸ்டர் பிளான் துரை மற்றும் அருணாசலத்தின் முன்னாள் முதலாளி என்று இவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பிறகு காவ்யா முகம் நிறைய சந்தோஷத்தில் பார்த்திபனை கோவிலுக்கு கூப்பிடுகிறாள். பார்த்திபன் மிகுந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து கிளம்பி செல்கிறான். இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்.

அடுத்த வாரம் | Vijay TV Latest Promo

பார்த்திபனுடன் கோவிலில் இருந்து காவ்யா விவாகரத்து குடுக்குமாறு கேட்கிறாள். கடுப்பான பார்த்திபன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுகிறான். ஆனால் ஒரு கண்டிஷன்! நீ இன்னும் 6 மாசம் எங்க வீட்ல தான் இருக்கனும், அதுக்கு அப்புறமும் உனக்கு மனசு மாறலைன்னா நாம பிரிஞ்சிடலாம் என்று சொல்கிறான் பார்த்தி. இதற்கு காவ்யா என்ன பதில் சொல்ல போகிறாள் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.  உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்