Eeramana Rojave 2 Serial Today Episode: தீயில் மாட்டிக்கொண்டிருக்கும் காவ்யாவை மீட்க உள்ளே செல்லும் பார்த்திபன். அவர்கள் இருவரும் பத்திரமாக தப்பித்து வருவார்களா? என்னும் பரபரப்பு நிகழ்வுகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல்.
இதுவரை நடந்தது
காவ்யாவை எப்படியாவது இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை எடுக்கும் பார்த்திபன். ஆனால் காவ்யாவின் உண்மை அறிந்த பார்வதி இவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கிறார். இருப்பினும் பார்த்திபன் மனம் தளராது முயற்சிக்கும் அழகான நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் இன்று என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு இந்த வாரம் நடந்தை ஒரு ரீகேப்பாக பார்க்கலாம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காவ்யாவுக்காக வித விதமாக சமைக்கிறான் பார்த்திபன். ஆனால் காவ்யா கடையில் இருந்து சாப்பாடு ஆர்டர் செய்கிறாள். இருப்பினும் பார்த்திபன் எப்படி விடுவான்? வீட்டுக்கு ஆர்டர் வந்த பிறகு அதனை வாங்கி மறைத்து விடுகிறான்.
காவ்யா போன் செய்து ஏன் இன்னும் சாப்பிடுவரலை என்று கேட்டதும் இப்ப தான் டெலிவர் பண்ணேன் என்று கூறுகிறார். ஒரே குழப்பத்தில் காவ்யா இருக்கையில், பார்த்திபன் அவளை வெறுப்பேற்ற தான் சமைத்த சிக்கன், மட்டன், மீன் என்று அனைத்தையும் சாப்பிடுவது போன்று போட்டோ எடுத்து காவ்யாவுக்கு அனுப்புகிறான். ஒரு வழியா இருவரும் நன்றாக சாப்பிட்ட பிறகு பார்த்திபன் அந்த பார்சலை காவ்யாவிடம் கொடுக்கிறான். இருப்பினும் காவ்யா கோவப்படாதது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
சரி இது முடிந்த பிறகு இருவரும் கோவிலில் சந்திக்கின்றனர். கிடைக்கிற கேப்லலாம் சிக்சர் அடிக்கிற மாறி, பார்த்திபன் பாக்குற இடத்தில் எல்லாம் காவ்யாவை இம்ப்ரெஸ் செய்கிறான். ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் காவ்யா நழுவுகிறாள். பிறகு காவ்யாவை அவள் படிக்கும் இடத்திற்கு கொண்டு போய் விடுகிறான் பார்த்திபன். அங்கிருந்து கிளம்பிய உடன் காவ்யாவின் தோழிகள் செம்ம ஸ்மார்ட்டான புருஷன் உனக்கு கிடைத்திருக்கிறார் என்று அவளை கடுப்பேத்துகிறார்கள்.
பிறகு கிளாஸ் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஏசி தீ பிடித்து எரிய ஆரம்பிக்கிறது. அனைவரும் உயிரைக் காப்பாற்ற தப்பி ஓட ஆரம்பிக்க தீ முழுக்க பரவி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் காவ்யா பார்த்திபனுக்கு போன் செய்கிறாள். பதறிப் போய் காவ்யாவை பார்க்க பார்த்திபன் வருகிறான். வந்து பார்த்தா பில்டிங் மொத்தமும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அங்கு குவிந்து கொண்டிருந்த போலீஸை மீறி உள்ளே செல்கிறான் பார்த்திபன்.
இன்றைய எபிசோடு
காவ்யா எங்கு இருக்கிறாள் என்பதை தேடி செல்லும் பார்த்திபன் மீது ஒரு இரும்பு விழுகிறது. அதனால் சற்று நேரம் மயங்கி விழுந்துவிட்டான் பார்த்திபன். இந்த தகவல் நியூஸில் வர இரண்டு குடும்பத்தாரும் பதறி போய் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். தீயணைப்பு படையினர் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற போராடுகின்றனர். இப்படி எல்லா பக்கமும் பரபரப்பாக இருக்க, திடிரென்று கண் திறக்கிறான் பார்த்திபன். அனைவரும் மயங்கி விழுந்திருக்க நிலையில் காவ்யா எங்கு இருக்கிறாள் என்று தேடி அழுகிறான். கீழே இறந்தவர்களின் உடலை ஒவ்வொன்றாக எடுத்து வர அவர்கள் குடும்பத்தினர் கண்ணீருடன் பயந்து போய் நிற்கின்றனர்.
அங்கையோ பார்த்திபன் மயங்கிய நிலையில் காவ்யாவை கண்டுபிடிக்கிறான். அவளை தட்டி தட்டி எழுப்ப முயற்சிக்கிறான், இருந்தும் பயனில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டு அவளை தூக்கி நடக்கிறான். இருவரும் அங்கிருந்து வெளிய வருவதை பார்த்த பிறகு தான் அவர்களின் குடும்பத்தினருக்கு உயிர் வந்தது. இருப்பினும் காவ்யா மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து துடிக்கும் பார்த்திபன் அவளை காப்பாற்ற மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
Eeramana Rojave 2 serial Today Episode, eeramana rojave 2 serial, eeramana rojave 2 today episode tamil, eeramana rojave 2 episodes, vijay tv latest promo,
உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…