பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக புகைகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் சண்டையாக மாற பத்தவைக்கப்படுகின்றன. ஆனால் அவை புஷ்ஷென்று போய்விடுவதுமாதிரிதான் கடந்த இரண்டு நாட்களாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜிபி முத்துவை டார்கெட் செய்திருக்கிறார்கள் சிலர்.
ஜனனி, தனலட்சுமி, ஆயிஷா ஆகியோருக்கு தெரிந்திருக்கிறது ஜிபி முத்து நல்ல போட்டியாளராக மாறுவார் என்பது. அதனால் அவரை டார்கெட் செய்திருக்கிறார்கள் போல. ஆனாலும் அவரை டார்கெட் செய்தால் அது தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணரவில்லை.
இன்றைய எபிசோடில், ஆயிஷா நீங்கள் எலிமினேசனிலும் இருப்பீர்கள் என வெளிப்படையாக பேசுகிறார். ஜனனியோ ஜிபிமுத்து எல்லாருக்கும் வேலை செய்து கொடுக்கிறார் என்பது போல பேசுகிறார். முன்னதாக தனலட்சுமி கேமராவிலேயே புகார் அளித்தார். இப்படி 3 பேரும் ஜிபிமுத்துவை ஓரங்கட்ட பார்க்கிறார்கள்.
ஜிபி முத்து ஆர்மி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த வாரம் வேற லெவல்ல இருக்கப்போகுது..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…