இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 18 ஆம் தேதி வெளியாக உள்ள படம் "திருச்சிற்றம்பலம்". இதில் நடிகர் தனுஷுடன் இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 வருடங்களுக்கு தனுஷ் அனிருத் கூட்டணியில் இந்த படத்தின் இசை உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் அணைத்து பாடல்களும் வெளியாகியுள்ள நிலையில் ஜூலை 30 அன்று படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உட்பட தனுஷ் ரசிகர்கள் கலந்துகொண்டு இசை வெளியிட்டு விழாவை திருவிழாவாக கொண்டாடினர்.
தற்போது இந்த இசை வெளியிட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்புகியுள்ளது. அதில் பேசிய தனுஷ்.. உங்களையெல்லாம் இப்படி பார்த்து ஒன்றை வருசமாச்சு. சரி ஒன்றை வருடம் கழித்து என் படம் வருகிறது. அது மாஸான படமாக வந்த நல்ல இருக்கும்ன்னு சொன்னாங்க. சாரி மாஸ்ன்னா என்ன? ஒரு ஹீரோ பத்து பேர அடிச்சிட்டு கெத்தா நின்னா அது மாஸ், ஒரு ஹீரோ செஞ்சிருவன்ன்னு பஞ் டயலாக் பேசுனா அது மாஸ், இல்ல கடைசி நேரத்தில் ஆபத்துல இருக்குறவங்கள காப்பாத்துனா மாஸ்.
ஆனால் இது எல்லாத்தையும் தாண்டி ஒரு மாஸ் இருக்கு, அது நம்மள வளக்குற அப்பா அம்மா வயசான அப்புறம் அவங்க குழந்தையை மாறிருறாங்க, அவங்கள கடைசிவரை கூட இருந்து பாத்துகிறது மாஸ், கடைசி வரைக்கும் செய்த நன்றியை மறக்காம இருந்தா அது மாஸ், நம்ம மேல தப்பு இல்லைன்னா கூட ஒரு பிரச்சனை சரியாக வேண்டும் என்று இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட அது மாஸ், நாம நண்பன் உதவின்னு கேட்ட உடனே கைல காசு இல்லனா கூட கழுத்துல இருக்குற செயினை அடமானம் வைத்து காசு கொடுத்த அது மாஸ். அப்படி பார்த்த திருச்சிற்றமபலம் ஒரு பயங்கரமான மாஸ் படம்தான்" என கூறியுள்ளார். இதனை கேட்ட அரங்கம் முழுவதும் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரப்படுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…