Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பைரவி, கௌதம், இலக்கியாவை பொய் சொல்லி சம்மதிக்க வைத்த ஜோசியர்! இனிதான் ஆட்டம் ஆரம்பம்... Ilakkiya 27 december 2022

UDHAYA KUMAR Updated:
பைரவி, கௌதம், இலக்கியாவை பொய் சொல்லி சம்மதிக்க வைத்த ஜோசியர்!  இனிதான் ஆட்டம் ஆரம்பம்... Ilakkiya 27 december 2022Representative Image.


பைரவியைத் தனியே கூட்டிச் சென்று பேசுகிறார் ஜோசியர். ஆனாலும் பைரவி மிகவும் கோபத்துடன் கத்துகிறார். ஆனால் அவரைச் சமாதானப்படுத்தி ஜோசியர் மேற்கொண்டு பேசுகிறார். 

பைரவிக்கு இலக்கியாவைச் சுத்தமாக பிடிக்கவில்லை. அவள் அடங்காப்பிடாரி, பெரியோர்களை மதிக்கமாட்டார். ஸ்டேட்டஸ் பாக்காமல் அவளுடன் சரிசமமாக நின்று பேசக்கூட எனக்கு விருப்பம் இல்லை என அடுக்கடுக்காக தன் கோபத்தை சொல்ல, அதற்கு ஜோசியர், இலக்கியாவை நீங்கள் உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களுக்குத்தான் லாபம் என்கிறார். 

பெரிய பெரிய மனுசங்கள்லாம் தங்களோட எதிரிங்கள வெளியில விடாம தங்கள் காலுக்கடியிலேயே வச்சிப்பாங்க. அவங்கள அதட்டி வேல வாங்குவாங்க. அப்படி தங்கள கூடவே வச்சிக்கிட்டு செயல்படவிடாம பாத்துப்பாங்கன்னு சொல்ல, பைரவி யோசிக்க ஆரம்பிக்கிறார். 

பைரவி கொஞ்சம் குழப்பமடைவது போல தெரிகிறது. இதனால் என்னவோ பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டு நகர்கிறார். அடுத்து ஜோசியர் இலக்கியா அறைக்கு வருகிறார். 

இலக்கியாவிடம் அவளது அம்மா கெஞ்சியும், கோபப்பட்டும் பேசி பார்த்தும் அவள் கொஞ்சம் கூட இறங்கி வருவதாக தெரியவில்லை. கௌதமின் அம்மா ஜானகி வந்தும் பேசி பார்க்கிறார். எத்தனையோ முறை கெஞ்சியும் அவள் சம்மதிப்பது போல தெரியவில்லை. இப்போது சரியான நேரத்தில் ஜோசியர் அவள் அறைக்கு வந்து, கௌதம் சம்மதித்து விட்டாரே என ஒரு பொய்யை எடுத்து விடுகிறார். 

ஜோசியர் பொய் சொல்வது அறிந்த ஜானு, என்ன இவர் இப்படி சொல்றாரு. சரி பரவால எப்படியாச்சும் கல்யாணம் நடந்தா சரிதான் என மனதிற்குள் நினைத்து கொண்டு, அடுத்து இலக்கியாவிடம் பேசுகிறார். 

ஆமா இலக்கியா கௌதமே சம்மதித்துவிட்டான் என்கிறார். இலக்கியா எப்படியோ சம்மதித்து விட்டது போல முகம் மாறுகிறது. அடுத்து கௌதம் பக்கம் செல்கிறார்கள். 

இன்னும் ஏன் நாம இங்க இருக்கோம். வாங்க கிளம்பலாம். நான் ஒரு வாரம் வெளிநாட்டுக்கு சுற்றுலா போறேன். கடுப்பா இருக்கு என கொதிக்கிறார். அடுத்து அந்த இடத்துக்கு ஜோசியர் வருகிறார். அங்கு கௌதமின் அம்மா ஜானுவும் கௌதமை சமாதானம் செய்கிறார். 

கௌதமிடம் இலக்கியா சம்மதித்து விட்டதாக கூறுகிறார். ஜோசியர் என்ன இந்த அம்மா பொய் சொல்றாங்க என பார்த்துவிட்டு, கல்யாணம் நடந்தா சரிதான் என்கிறார். இப்போது கௌதம் யோசிக்க ஆரம்பிக்கிறார். எப்படியும் கோபத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு சம்மதம் சொல்வார் என எதிர்பார்க்கும் வேளையில் தொடரும்.... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்