மும்பையில் பட வாய்ப்புக்காக மாப்பிள்ளை வீட்டில் போட்ட 100 பவுன் நகையுடன் ஓடிப் போன அஞ்சலியால், திருமண வீட்டில் குழப்பம் உருவாகியுள்ளது.
ஜானுவும், கௌதம் அப்பாவும், பைரவியும் பாதபூஜை செய்ய கௌதமை அழைக்கிறார்கள். உண்மையான மணப்பெண் அஞ்சலி இல்லை இலக்கியாதான் என அறிந்து கொண்டு கோபத்தில் விறு விறுவென மணமேடையை நோக்கி நடைபோடுகிறான் கௌதம்.
கல்யாண வீடே விழாக் கோலம் கொண்டு இருந்த அந்த நொடியில் கௌதம் திருமணத்தை நிறுத்துங்க. இந்த திருமணம் நடக்காது. எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க என்கிறான். இதைக் கேட்டதும் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி.
கௌதமின் அம்மா, அப்பா, பைரவி அம்மா என அனைவரும் அதிர்ச்சியில் நிற்க ,கௌதமிடம் ஏன் பா என்ன ஆச்சு என கேட்கிறார் அவரின் அப்பா. அம்மாவும் அதிர்ச்சியில் கேட்கிறார்.
பைரவி ஏன் கௌதம் என்ன ஆச்சு. பாத பூஜை செய்ய உனக்கு விருப்பம் இல்லைனா விடு. ஏன் கல்யாணத்த நிறுத்த சொல்ற என கேட்கிறார் பைரவி. அதற்கு கௌதம் கல்யாண பொண்ணே ஓடி போயிட்டா இப்ப எப்படி கல்யாணம் நடக்கும் என கூற அங்கிருந்து இலக்கியா, அவளது தம்பி, அம்மா, மாமா, அஞ்சலியோட அம்மா என வரிசையாக கிளம்பி வருகின்றனர்.
அஞ்சலி ஓடிப்போயிட்டா. ஆனா அஞ்சலி உண்மையான மணப்பெண் அல்ல. இலக்கியாதான் மணப்பெண். குடும்பமே ஏமாற்றியிருக்கிறது என குமுறுகிறான் கௌதம். இதன் பின்னர் பைரவி தனது பங்குக்கு இந்த திருமணம் நின்றதோட சரி நல்லவேளை தப்பித்தோம் என்கிறமாதிரி பேசுகிறார்.
அஞ்சலியின் அம்மா என் பொண்ணுக்கு கிடைக்காத வாழ்க்கை இலக்கியாவுக்கு கிடைத்துவிடக் கூடாது என்கிறார். அதே நேரம் ஜோசியக்காரர் வந்து இலக்கியா தானே உண்மையான ஜாதககார மணப்பெண் அவரையேத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்கிறார்.
அனைவரும் சம்மதித்தாலும்கூட பைரவி சம்மதிக்க மாட்டாரே. அவரும் ஒரு பக்கம் கோபத்தில் குதிக்க, மறுபுறம் யார் சொன்னாலும் நான் ஒத்துக்கமாட்டேன் என்கிறார் இலக்கியா. அம்மா சொல்லியும் அவரை மதிக்காமல் கோபமாக பேசுகிறாள் இலக்கியா.
பைரவியைத் தனியே கூட்டிச் சென்று பேசுகிறார் ஜோசியர். ஆனாலும் பைரவி மிகவும் கோபத்துடன் கத்துகிறார். ஆனால் அவரைச் சமாதானப்படுத்தி ஜோசியர் மேற்கொண்டு பேசுகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…