கோலிவுட்டில் அதிக சம்பளமா வாங்கும் நடிகராக அறியப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக, வருமான வரி தினத்தை முன்னிட்டு, இன்று வருமானவரித்துறையால் விருத்தி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஜேம்ஸ் வில்சன் 1860 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் வருமான வரியை அறிமுகப்படுத்தினார். அப்போது செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது.
இது பின்னர் பல மாறுதல்களுக்கு உட்பட்டாலும், சுதந்திர இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்திய வருமான வரி முறை இன்னும் பல்வேறு மாற்றங்களுடன் நீடித்து வருகிறது. இந்நிலையில், வருமான வரியை அறிமுகப்படுத்தியதை நினைவு கூறும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதி வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, அதிக வரி கட்டுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதை வழங்க, ரஜினிகாந்த சார்பில் அவரது மகள் சௌந்தர்யா விருதை பெற்றுக்கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…