மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று இன்னும் சில மணி நேரத்தில் துவங்கவுள்ளது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கின்றனர்.
முன்னதாக இந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்து அதில் நடிக்கவும் திட்டமிட்டிருந்தார். அதிலும் இந்த படத்தையும் மணிரத்னத்தை வைத்தே இயக்க வேண்டும் என்கிற மிகப் பெரிய கனவுடன் இருந்தார். மணிரத்னத்திடம் பேசி ஒப்பந்தம் செய்து, மற்ற நடிகர் நடிகைகளையும் ஒப்பந்தம் செய்துவிட்ட நிலையில்தான் படம் கைவிடப்பட்டது.
1989ம் ஆண்டு உருவாகவிருந்து இந்த திரைப்படத்தில் வந்தியத் தேவனாக கமல்ஹாசனும், அரசர்களாக பிரபு, சத்யராஜ் ஆகியோரும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஒரே பாகமாக எடுத்து முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இளையராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவிலும் படம் உருவாகும் என அப்போது பேசப்பட்டிருந்தது. ஆனால் பல காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. பின் 33 வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. அதே திரைப்படம் இல்லை என்றாலும் கதை ஒன்றுதான். இது ஒரு வகையில் கமல்ஹாசனின் கனவும் கூட. அதனை மணிரத்னம் நினைவாக்குகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…