சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடைசி தருவாயில் இருந்த நடிகை ஸ்ரீவித்யாவை பார்த்து நடிகர் கமல்ஹாசன் கதறி கதறி அழுதிருக்கிறார்.
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த கமல் ஹாசன் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது இந்தியன் 2வில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்திலும், மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
கமல் ஹாசன் வெறும் நடிகர் மட்டுமில்லை. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். மேலும், கமல் ஹாசனை சிலர் தீர்க்கதரிசி என்றும் கூறுவார்கள். உதாரணமாக டிடிஎஸ் என்ற ஒன்று அறிமுகமாகும் முன்னரே திரையரங்க உரிமையாளர்களை அழைத்து டிடிஎஸ்ஸுக்கு மாறுங்கள் என அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதேபோல் இப்போது ஓடிடியில் படம் வெளியாவது இயல்பாகிவிட்டது. ஆனால் அதை தியேட்டர் டூ ஹோம் என்ற முறையில் நடைமுறைப்படுத்தவும் கமல் ஹாசன் முயன்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்ததும் கவனிக்கத்தக்கது.
கமல் ஹாசன் தனது திருமண வாழ்க்கை பல விமர்சனங்களை சந்தித்தாலும் சரிகா, வாணி கணபதி என இருவரை திருமணம் செய்துகொண்டார். இருவரையும் பிரிந்து கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பிறகு பிரிந்தார். திருமண வாழ்க்கை என்பதை தாண்டி காதலிலும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் கமல். அவர் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகளுடன் காதலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நடிகை ஸ்ரீவித்யாவும் கமல் ஹாசனை திவீரமாக காதலித்தது பலரும் அறியாதது. ஆனால் கமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சில காலம் தனியாக இருந்த ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த உறவு பாதியிலேயே முடிந்தது. அதன் பிறகு யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி கேரளாவில் இருந்த அவருக்கு முதுகெலும்பு புற்றுநோய் வந்தது.
புற்றுநோய் வந்த பிறகு உடல்நலம் மிகவும் மோசமடைய அவரிடம் உங்களது கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு கமல் ஹாசனை பார்க்க வேண்டும் என ஸ்ரீவித்யா சொன்னார். இந்தத் தகவல் கமலுக்கு தெரியவர அவரும் கேரளாவுக்கு சென்று ஸ்ரீவித்யாவை பார்த்திருக்கிறார்.
அப்போது புற்றுநோயால் உடல் உருக்கப்பட்டு கட்டிலில் சுருண்டு கிடந்திருக்கிறார் ஸ்ரீவித்யா. அதை தாங்கிக்கொள்ள முடியாத கமல் ஹாசன்எப்பேர்ப்பட்ட அழகி இப்படி இருக்கிறாரே என நினைத்து அந்த இடத்திலேயே அங்கேயே கதறி அழ ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு கமல் ஹாசனை பார்த்த சில மணி நேரத்திலேயே ஸ்ரீவித்யாவின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…