கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படம் சென்சார் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியில் கசிந்துள்ள நிலையில், அதில் படத்தின் ரன் டைம் மற்றும் படத்துக்கு கிடைத்த சர்ட்டிபிகேட் குறித்தும் தகவல் வந்துள்ளது.
2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் வகையில் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாம். மேலும் பெரிய அளவில் கட் எதுவும் இன்றி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்துக்கான புரோமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜை யூடியூப் சேனல்கள் வளைத்து வளைத்து பேட்டி கண்டு வருகின்றன. மேலும் விக்ரம் படத்தின் மற்ற நடிகர்கள் யார் யார் பேட்டி குடுப்பார்கள். கமல்ஹாசன் அவர்களின் பேட்டி எதுவும் வெளிவருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், கமல்ஹாசனின் மிகத் தீவிரமான ரசிகர்கள் 5 பேரை அழைத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது படக்குழு. அவர்களிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அவர்கள் கமல்ஹாசன் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், திடீரென அவர்கள் பின்னாடியிருந்து வந்து அவர்கள் முன் தோன்றி நிற்கிறார் கமல். அவ்வளவுதான் ரசிகர்கள் ஷாக் ஆகிவிடுகின்றனர்.
அதில் பிரசாந்த் எனும் ரசிகர் கமல்ஹாசனைப் பார்த்ததும் அழுதே விட்டார். சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசன் குறித்த பல பேட்டிகள், வீடியோக்கள், புகைப்படங்கள், தகவல்கள் என அனைத்தையும் விடாது ஷேர் செய்யும் அவர் கமல்ஹாசனை நேரில் பார்த்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். மேலும் 4 ரசிகர்களும் பேரானந்தம் அடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…