அடிக்குற அடியில் தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா எனுமாறு, செப்டம்பரில் தமிழில் ரிலீசாகும் திரைப்படங்கள் வேறு லெவலுக்கு ரவுண்டு கட்டி நிற்கின்றன. அதில் முக்கியமான படம் பொன்னியின் செல்வன்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையில், பின்னணி இசை தாறுமாறாக பின்னி பெடலெடுக்க தயாராக உள்ளன. இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.
இதேநாளில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷ் படமான நானே வருவேன் திரைப்படம் ரிலீசாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த படமும் அதேநாளில் வந்தால் இரண்டு படங்களுக்கும் வசூல் அடிவாங்கும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…