சினிமாத் துறையைச் சேர்ந்த பல நடிகைகள் அடுத்தடுத்து பல காரணங்களால் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பலர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்தில் கேரளாவில் சஹானா, பெங்களூரில் சேத்னா என பலர் வேறு வேறு காரணங்களால் இறந்த நிலையில், இன்றும் ஒரு செய்தி அப்படி வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா என்பவர் கணவர் கொடுமை காரணமாக தூக்கிட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சஹானா தனது வீட்டு ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பெங்களூரில் சேத்தனா ராஜ் என்பவர் உடல் எடையை குறைக்க கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய முயன்றவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஷெரின் செலின் மேத்யூ எனும் 26 வயதான நடிகை, அவரது வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தற்கொலை என்று கூறப்பட்டாலும், இதன் உண்மை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது ரூம் மேட்ஸிடம் விசாரித்த போது, கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அடிக்கடி தனிமையில் இருக்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…