மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படம் மாமன்னன். பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிக்கிறார். அவருக்கு காமெடி தவிர்த்து மிக முக்கியமான குணசித்திர வேடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. பின்னர் ஷூட்டிங் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருந்த நிலையில், சில வாரங்களுக்குமுன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கான காட்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் 3வது மற்றும் கடைசிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 3ம் கட்ட படப்பிடிப்பு தொடங்க கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் நேரம் ஒதுக்க வேண்டும் என கிண்டலாக எழுதியுள்ளார் உதயநிதி. விரைவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டு வருகின்றனராம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…