இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2, மண்டேலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாலாஜி மோகனும், ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த கல்பிகா கணேஷ் என்பவர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்துள்ளார்.
தங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூ டியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரான நிலையில், ஜனவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நடிகை கல்பிகா கணேஷுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…