இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன்" பாகம் 1 குறித்த மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
கல்கி எழுதிய வரலாற்று நாவலான "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாக்கங்களாக வரவிருக்கும் இந்த படத்தின் முதல்பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மிகவும் மும்மரமாக நடந்துவருகிறது.
மேலும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஷோபிதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல எழுத்தாளர் பி.ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார்.
தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், என பான் இந்திய படமாக பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதன்படி, ’சோழர்கள் வருகிறார்கள்’ என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் கூடிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையும் பிரமாண்டமாகவே உள்ளது. மிகப்பெரிய கோட்டை சுற்றுசுவரின் பின்னணியில் புலிக்கொடியை இந்திய வீரர்கள் நிற்கிறார்கள். அவர்கள் அருகில் வாள்கொண்டு நிற்பது நடிகர் விக்ரம் போன்று உள்ளது. ஏற்கனவே மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படமானது இந்த வீடியோ வெளியான தருணத்தில் இருந்து மேலும் எதிர்பார்ப்பி கிளப்பிவிட்டுள்ளது.
கூடுதல் தகவலாக இந்தப் படத்தின் டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் வாரங்களில் நாம் இந்தப்படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் பெறலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…