Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mouna Raagam 2 Today Episode: இத்தனை வருடம் மறைத்திருந்த ஷீலாவின் முகமூடியை கிழித்தெறிந்த சக்தி! பரபரப்பான கதை திருப்பங்களுடன்!

Priyanka Hochumin September 16, 2022 & 17:15 [IST]
Mouna Raagam 2 Today Episode: இத்தனை வருடம் மறைத்திருந்த ஷீலாவின் முகமூடியை கிழித்தெறிந்த சக்தி! பரபரப்பான கதை திருப்பங்களுடன்!Representative Image.

Mouna Raagam 2 Today Episode: இரண்டு தாரம் இருக்கும் கணவன் என்னென்ன அக்கப்போரை தாங்க வேண்டியதை இந்த சீரியல் மிக தத்ரூபமாக காண்பிக்கிறது. இதில் ஒரு குடும்பம் விட்டுக்கொடுத்து போகிறது, ஆனால் மற்றொன்று எப்படி இருந்தாலும் இம்சை தான் செய்கிறது. இந்த சீரியலின் முதல் பாகம் ஒரு வழியாக முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது திடிரென்று இரண்டாம் பாகத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இதுவரை என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இன்று மௌன ராகம் 2-வில் அதிரடியான திருப்பங்களுடன் காட்சிகள் நடைபெற்றுள்ளது. உங்களுக்கு நிச்சிய பிடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே, நீங்கள் இரவு 7 மணி வரை ஏன் காத்திருக்க வேண்டும் வாருங்கள் இன்று என்ன நடந்தது என்று பாப்போம்.

இன்றைய எபிசோடு

ஸ்ருதி, அவளின் தாத்தா மற்றும் ஷீலா போட்ட சதியில் இருந்து வருண், சக்தி பத்திரமாக வீடு திரும்பினர். பிறகு என்ன நடந்தது என்று அவர்கள் பேசுகையில் ஸ்ருதி தான் சக்தி போனில் இருந்து வருணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளாள் என்று கண்டு பிடித்தனர். கோபமடைந்த வருண் ஸ்ருதியிடம் இதை பற்றி கேட்கபோவதாக கூறியதும் சக்தி தடுக்கிறாள். இப்போதெய்க்கு எதுவும் கேட்க வேண்டாம், பிறகு பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

தங்களின் சதியில் தோல்வியடைந்ததால் கோபமடைந்த ஸ்ருதி, தன்னுடைய தாத்தாவிற்கு போன் செய்து கேட்க, அவரோ சக்தி எப்படி இங்க வந்தா? என்று கண்டபடி திட்டுகிறார். கடுப்பான ஸ்ருதி, ஷீலா பேசிக் கொண்டிருக்கும் போது வேலைக்காரி தான் சக்தியிடம் வரும் இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டனர். இது முடிந்த கையோடு இரவு வருணுக்கு தர வேண்டிய மாத்திரையை சக்தி ஷீலாவிடம் கேட்கிறாள். அவள் அதை கொண்டு வந்து கொடுத்ததும், மாத்திரையை என்கிட்டையே தரலாமே என்று கேட்கிறாள். கடுப்பான ஷீலா அவளை திட்ட, வருண், மனோகர், தருண் அனைவரும் ஷீலாவை அந்த பொறுப்பை சக்தியிடம் தர வர்பொருத்துகின்றனர்.

ஆனால் ஷீலா அடம்பிடிப்பதை பார்த்ததும் அனைவருக்கும் ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது. எனவே, சக்தி உண்மையை கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஷீலாவை பார்த்து ஏன் மாத்திரையை ஒளிச்சு வைக்கிறீங்க, நான் அதை கண்டுபிடித்ததும் வேற இடத்திற்கு மாத்தி வைக்கிறீங்க என்று மாத்தி மாத்தி கேள்வி கேட்கிறாள். அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஷீலா தவிக்கிறாள். பிறகு சக்தி, நான் இன்னைக்கு இவருடைய டாக்டரை பார்க்க போனேன், அவர் நான் எழுதி கொடுத்த மாத்திரை இது இல்லைன்னு சொல்டாரு என்று கூறுகிறாள். அதிர்ச்சியடைந்த மனோகர் என்னமா சொல்ற என்று கேட்டதும், ஆமா மாமா இது இவரை குணப்படுத்துறதுக்கு இல்லை, நல்லா இருக்குறவங்கள நோயாளியா வச்சிருக்க தான் இந்த மாத்திரை, இதை தான் இவருக்கு இதனை வருசமா இவங்க கொடுத்துட்டு வராங்க, அதனால தான் இவருக்கு இன்னும் உடம்பு சரியாகல என்று உண்மையை கூறிவிட்டால்.

உடனே ஏதேதோ சொல்லி ஷீலா மழுப்ப, சக்தி செம்ம தெளிவா இருந்து அடிச்சா பாருங்க. நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும், வேண்ணா நீங்களே டாக்டருக்கு போன் பண்ணி கேளுங்க என்று சொல்கிறாள். உடனே தருண் போன் செய்து ஸ்பீக்கர்ல போட்டு கேட்கிறான். டாக்டர் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, ஸ்ருதி மட்டும் லேசா பம்புகிறாள். கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மனோகர் ஷீலாவை கன்னத்தில் விட்டாரு பாருங்க ஒரு அரை. உன்னைய நம்பி ஏன் பசங்கள விட்டா என்ன பண்ணி வச்சிருக்க, ஓ என்ன பழி வாங்க முடிலைனு என் பையன கொடும படுத்திட்டு இருக்கிறீயா? என்று லெஃப்ட் ரைட் வாங்குறார்.

பிறகு தருணை சப்போர்டுக்கு கூப்பிடுகிறாள் ஷீலா, ஆனால் எனக்கு ஏன் அண்ணன் மேல தான் அளவு கடந்து பாசம் வச்சிருக்கேன். அவனையா இப்படி பண்ணீங்க இனிமே அப்பா மன்னிச்சாலும் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று கைய விரிச்சிடுறான். பிறகு வருணிடம் சென்று நல்லவ வேஷம் போட ட்ரை செய்கிறாள், ஆனால் வருண் கேட்ட கேள்வி ஷீலாவை செருப்பால அடிச்ச மாறி இருந்துச்சு. இதுவே எங்க அம்மா உயிரோட இருந்தா இப்படி பன்னிருபங்களா, இல்லை நீங்க தான் உங்க புள்ளைங்களுக்கு இப்படி பன்னிடுவீங்களா? என்று கேட்கிறான். எல்லாத்தெயும் கேட்டுட்டு கடைசியா சக்தியிடம் போக, கடுப்பாக மனோகர் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறான். அவளும் பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துட்டு வெளியே செல்கிறாள்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இன்னும் அடுத்தடுத்து பரபரப்பான தகவலை தெரிந்துகொள்ள காத்திருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்