Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கைது செய்யப்பட்ட அபி...கோபத்தில் ஜட்ஜ் சங்கரநாராயணன்...என்ன செய்ய போகிறான் வெற்றி!

Priyanka Hochumin September 16, 2022 & 13:00 [IST]
கைது செய்யப்பட்ட அபி...கோபத்தில் ஜட்ஜ் சங்கரநாராயணன்...என்ன செய்ய போகிறான் வெற்றி!Representative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: சமூகத்தின் மீதும் பெற்றோர்கள் மீதும் இருந்த நம்பிக்கை உடைந்த ஒரு மனிதர் எப்படி தன்னுடைய வாழ்நாளை வாழ்கிறான் என்றும், அவன் திருந்தி வாழ நினைக்கும் பொழுது இந்த சமூகம் அவனை எப்படி அவமதிக்கிறது என்றும் மிக அழகாக கொண்டு செல்லும் தொடர் தான் தென்றல் வந்து என்னை தொடும். சீரியலின் ப்ரோமோ மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த சீரியல் வாரா வாரம் தங்களின் டிஆர்பியில் முன்னேறி கொண்டே செல்கின்றனர்.

அப்படியாக இந்த வாரம் நடந்ததும், இன்றைக்கான கதை என்ன என்றும் நாம் பார்ப்போம்.

இதுவரை

வீடு சூழ்நிலை காரணமாக அபி நந்தினி இருவரும் ஒரு துணி கடை ஒன்றை ஆரம்பிக்கின்றனர். அதே கடையில் நந்தினியின் கணவன் கலையும் பணி புரிகிறான். தன்னால் எந்த உதவியும் வீட்டிற்கு தர முடியலையே என்ற ஏக்கத்தில் வேலை தேடி செல்லும் வெற்றி. வீட்டில் உள்ள அனைவரும் சந்தோசம் அளிக்கும் வகையில் வேலையுடன் திரும்பி வந்த வெற்றி. பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தன்னுடைய திறமையை காட்டி அனைவரையும் அசர வைத்துவிட்டான். ஆனால் வெற்றிக்கு ஷாக் தரும் விதமாக அவனை வேலை விட்டு அனுப்பிவிட்டனர்.

உடைந்து போய் வீட்டுக்கு வந்த வெற்றியை அவனின் தந்தை வழக்கம் போல் திட்டிவிட்டு காயப்படுத்துகிறார். இருப்பினும் அபி கொடுத்த நம்பிக்கையால் அடுத்த வேலை தேட செல்கிறான். இதற்கிடையில் இவர்கள் இருவரின் திருமணம் குறித்த சர்ச்சை நடைபெறுகிறது. இவர்களின் திருமணம் இன்னும் எந்த அத்தியாவசிய ஆவணங்களிலும் பதிவு படவில்லை.

இன்றைய எபிசோடு

வெற்றியை நிரந்தரமாக பூங்காவனத்திடம் இருந்து பிரிக்க பவானி செய்யும் சூழ்ச்சி வலையில் வெற்றி சிக்குவானா? வெற்றியை போலீஸிடம் மாட்ட வைக்க, அவன் வேலை தேடி செல்லும் ஹோட்டலில் ஒரு அறைக்கு அழைத்து வர வைத்து அங்கு போதை பொருட்களை வைத்துள்ளான் பவானி. பின்பு போலீசிக்கு அந்த தகவலை தெரிவித்து காத்துக் கொண்டிருக்கிறான். வெற்றி வேலைக்கு தேடி செல்லும் சமயத்தில் தன்னுடைய போனை வீட்டில் வைத்து விட்டு செல்கிறான். அவன் ஒரு ஹோட்டலில் வேலை கேட்டு செல்கிறான். அபியோ வெற்றியின் போனை அவனிடம் கொடுக்க அங்கு செல்கிறாள்.

ஆனால் எதிர்பார்க்காத விதமாக அந்த இடத்திற்கு போலீஸ் வந்து தேடுதல் பணியை ஆரம்பிக்கின்றனர். பார்த்தால் அங்கு விபச்சாரம் நடைபெறுவதாக அனைவரையும் கைது செய்கின்றனர். அதே போல் அங்கு இருக்கும் அபியை தவறுதலாக கைது செய்கின்றனர். வெற்றி எவ்ளோ சொல்லியும் தகுந்த ஆவணம் அவர்களிடம் இல்லாததால் அபியை கைது செய்து அழைத்து சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரையும் ஜட்ஜ் சங்கரநாராயணன் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அபியை அங்கு பார்த்ததும் குடும்பம் அனைவரும் உடைந்து போய்விட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்