தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் தற்போது வரை திரையரங்குகளில் நல்ல முறையில் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில், அடுத்த படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதுவும் இந்த மாதமே வெளியாகிறது என்கிற தகவல் தனுஷ் ரசிகர்களையும் செல்வராகவன் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் இணைந்துள்ள புதிய படம். அதிலும் இந்த படத்தில் செல்வராகவன் நடித்தும் இருக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால் கூடுதல் சுவாரஸ்யம். அதுமட்டுமின்றி படத்தின் கதைக்களமும் வித்தியாசமானதாக இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷை பார்த்துவிட்டு இந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தை பார்ப்பவர்களுக்கு பெரிய ஷாக்கான விசயம் காத்திருக்கிறது. அதற்கு நீங்கள் செப்டம்பர் 29ம் தேதி வரை காத்திருக்கவேண்டும். அன்றுதான் ரிலீசாகிறது நானே வருவேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…